கல்பாக்கம்: நிலக்கரி சுரங்கங்களில் 300 மெகாவாட்டுக்கு குறைவாக மின்சார உற்பத்தி செய்யும் வகையில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக என்.எல்.சி., நிர்வாக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அணுசக்தி கழகத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். 2070ம் ஆண்டுக்குள் 0 கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்ட இந்த சிறிய அணு உலைகள் திட்டம் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post நிலக்கரி சுரங்கங்களில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.